அங்காள பரமேஸ்வரி
சுயம்புவின் வலதுபுறம் உலகை வலம் வந்த சிவபெருமானை ஒருநிலையில் சூலாயுதத்தால் நிறுத்திய, அகங்காரம் நீக்கி அன்புதனை புகுத்திடும் அன்னையாக, அடியவர்களின் துயரை விரைவில் நீக்கிடும் வடிவாம்பிகையாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்பு பொங்க அருட்காட்சி தருகின்றார். அங்காள பரமேஸ்வரிக்கு நேர் எதிர்திசையில் சிவனும் சக்தியும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் உருவில் அமர்ந்து காடசி தருகின்றனர்.
பெரியாண்டவர் தோற்றத்துடன் காட்சி
சுயம்பு லிங்கத்தின் மேற்புறம் மனித உருவில் உலகை வலம் வந்த, மானிடம் காக்க வந்த முதற் கடவுளாக, அருள் தருவதில் முன்னிற்கும் மூர்த்தியாக, பக்தர்களைக் காத்திட ஒருநிலையாய் திருநிலையில் நின்று பெரியாண்டவராக அமர்ந்து காட்சி தருகின்றார்.
No comments:
Post a Comment